Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பாணியில் கேன்களை ரோட்டில் வைத்து… திமுக நிர்வாகி படுகொலை!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (08:36 IST)
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் நேற்றிரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வள்ளியூரைச் சோந்தவா் முத்துராமன். இவருக்கு திமுகவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் தன் உறவினரை காரில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது சாலையில் மண்ணெண்ணெய் பேரல்கள் கிடப்பதைப் பார்த்த அவர் காரில் இருந்து இறங்கி அதை அப்புறப்படுத்தியுள்ளார்.

அப்போது அவரை சூழ்ந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்ட ஆரம்பித்துள்ளது. அவர் அலறவே அக்கம்பக்கத்து மக்கள் வர, கும்பல் தப்பியோடியது. வெட்டுக்காயம் பட்ட முத்துராமன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த கொலைக்கு முன் விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments