Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ மனு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் 4வது வேட்பாளர் போட்டியா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (08:44 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு சிறை என்பதால் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் ஒரு பாதுகாப்புக்காக 4வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ என்பவரை திமுக நேற்று களமிறக்கியது
 
இந்த நிலையில் திமுக 4வது வேட்பாளரை களமிறக்கியது வேறு காரணத்திற்காக என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது வைகோவின் வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டாலும் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுவார் என கூறப்படுகிறது
 
அதிமுகவில் இப்போதும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பலர் இருப்பதாகவும், குறிப்பாக பாமக வேட்பாளர் அன்புமணியை பிடிக்காத பல அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், அவர்கள் திமுக வேட்பாளருக்கு ஓட்டளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி, திமுக நான்காவது வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பட்டியல் வெளிவந்து அதன்மூலம் அதிமுகவில் ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் திமுக எதிர்பார்க்கின்றதாம்.
 
இந்த நிலையில் இன்னும் சிலமணி நேரங்களில் வேட்புமனு பரிசீலனை முடிந்தபின்னர் வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்படுமா? 4வது வேட்பாளரும் போட்டியிடுவது உறுதியா? என்பது தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments