Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - பின்னணி என்ன?

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (14:22 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தகூடாது என நீதிமன்றம் கூறிவிட்டதால், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.


 

 
தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
 
அந்த கூட்டத்தில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் முதல்வர், சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
அதோடு, நீதிமன்ற தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என கருதிய திமுக தரப்பு இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது. அதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் இன்று சென்னையிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
அந்நிலையில், இன்று மாலை தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்கவில்லை. ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், வருகிற அக்டோபர் 4ம் தேதி வரை இந்த வழக்கை ஒத்தி வைத்தது.
 
இந்நிலையில், இன்று மாலை நடைபெறவிருந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments