Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு

Siva
வெள்ளி, 3 ஜனவரி 2025 (09:55 IST)
காட்பாடியில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரும் நிலையில் சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கிய விவகாரம் குறித்து கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காட்பாடி காந்திநகரில் உள்ள கதிர் ஆனந்த் எம்பி வீட்டில் இல்லத்தில் சோதனை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.

இதே காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் காட்பாடியில் உள்ள திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில் அவரது  வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

+2 தேர்வில் Fail ஆனவர்களுக்கு மறுதேர்வு எப்போது? - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சிறப்பாக நடந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.. பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..!

பிளஸ் 2 தேர்வில் 100க்கு 100.. எந்தெந்த பாடத்தில் எத்தனை மாணவர்கள்?

வெளியானது ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்! அரியலூர் முதலிடம் பிடித்து சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments