Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக மூத்த தலைவரின் மருமகன் கொடூரக் கொலை

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (16:11 IST)
தமிழகத்தில் தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற மாவட்டம் மதுரை ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளிக்கூடத்துக்கு அருகில் முன்னாள் திமுக மண்டல தலைவர் வி.கே. குருசாமியின் மருமகன் எம்.எஸ். பாண்டியன் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் திமுகவின் முன்னாள் மண்டல தலைவர் குருசாமிக்கும் அதிமுகவின் முன்னாள் மண்டல் தலைவர்  ராஜபாண்டியனுக்கும் பகை இருந்ததாகக் கூறப்படுகிறது,
 
இந்நிலையில் இன்று மதுரை புனித ஜோசப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த எம்.எஸ். பாண்டியனை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
ராஜ பாண்டினுடைய ஆட்கள் தான் முன்விரோதம் காரணமாக கொன்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments