Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்.. வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் படுகாயம்..!

Mahendran
புதன், 8 மே 2024 (13:54 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறுவனை நாய் கடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் போலீஸ் குடியிருப்பில் தனது உள்ள தனது அத்தை வீட்டிற்கு கோடை விடுமுறையை கழிக்க வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வளர்ந்து வரும் நாய் திடீரென சிறுவனை கடித்ததாகவும் இதனால் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது
 
 இதனை அடுத்து உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவனின் பெற்றோர் பரங்கிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நாய் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 
 
இரண்டு நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் சிறுமியை நாய் கடித்துக் குதறிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறுவனை நாய் கடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments