Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதிக்கவாதிகளே இறுதியில் ஏமாறுவார்கள்- உதயநிதி டுவீட்

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (23:20 IST)
புதிய கல்விக் கொள்கை அந்தந்த மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீரி, மலையாளம்,கன்னடம், குஜராத்தி, அசாமி, பெங்காலி, கொங்கணி,மணிப்புரி, பஞ்சாபி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு வேண்டுமென்றே தமிழைப் புறக்கணித்துள்ளதோ எனக் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

புதிய கல்விக்கொள்கையை 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள ஒன்றிய அரசு, தமிழை மட்டும் திட்டமிட்டு புறக்கணித்துள்ளது. இந்தி-சமஸ்கிருத திணிப்பு, 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு, கல்லூரிக்கு நுழைவுத்தேர்வு என்ற சூழ்ச்சிகளும் - பிற்போக்குத்தனங்களுமே புதிய கல்வி கொள்கையாக வருகிறது. இதனால்தான் தி.மு.க உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களும், அறிவுசார் பெருமக்களும் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக எதிர்த்தனர், எதிர்க்கின்றனர். புதிய கல்வி கொள்கையை தமிழில் வெளியிடாமல் மக்களை ஏமாற்றி, இதை கொல்லைப்புறம் வழியாக செயல்படுத்த நினைத்தால் ஆதிக்கவாதிகளே இறுதியில் ஏமாறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் நிறுத்தம் செய்தி எதிரொலி: சுமார் 2000 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

இந்திரா காந்தி பண்ணுனது வேற.. மோடி கரெக்ட்டான ரூட்ல போயிட்டிருக்கார்!? - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து!

ரூ.100 கோடி நில மோசடி விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்..!

ஆன்லைனில் 5 லட்ச ரூபாய்க்கு கோகைன் ஆர்டர் செய்த பெண் டாக்டர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவுக்குள்ள ‘கராச்சி’ பேக்கரியா? அடித்து துவம்சம் செய்த கும்பல்! - ஐதராபாத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments