Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறண்ட வானிலை.. அதிகரிக்கும் வெப்பநிலை!? - வானிலை ஆய்வு மையம்!

Meteorological Center
Prasanth Karthick
ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (14:43 IST)

தமிழ்நாட்டில் பருவமழைக்காலம் முடிந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஜனவரி வரை பல பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் கடந்த வாரம் பருவமழை முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது பல பகுதிகளிலும் குளிர் அதிகமாக காணப்படுகிறது. காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

 

இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை முதல் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். பிப்ரவரி 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸ் வரையிலும் இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments