Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் வேண்டாம்: துரைமுருகனின் திடீர் அறிக்கை!

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (17:51 IST)
திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் அதிமுக அரசை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு...
 
தமிழக முதலமைச்சர், திமுகவை குறைகூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நீரை திறக்க வைப்பதில் அக்கறை செலுத்தவில்லை.
 
அதிமுக அரசு உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததில் இருந்து 113 நாட்களில் ஆக்கப்பூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். 
 
ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாது என கூறுவது வேதனை அளிக்கிறது. தோல்வியை மறைக்க திமுக மீது குறைகூறுவது அதைவிட வேதனை தருகிறது. 
 
விவசாயிகள் நலனில், அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments