Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை கவிழ்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய வேலையே கிடையாது: துரைமுருகன்

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (15:06 IST)
திமுக மண்டல மாநாடு நேற்றும் இன்றும் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய இரண்டாவது நாளில் திமுக தொண்டர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. இன்று காலை 9மணிக்கு இந்த மாநாடு தொடங்கிய நிலையில் இன்று பல்வேறு தலைப்புகளில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பேசி வருகின்றனர். நத வகையில் இந்த மண்டல மாநாட்டில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தமிழக ஆட்சியை கலைப்பது குறித்து ஆவேசமாக பேசியதாவது:

அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்கு கடினமான வேலை கிடையாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடையும் என முன்கூட்டியே எங்கள் தலைவர் கருணாநிதி கூறியிருந்தார் .  ஜெயலலிதா-ஜானகி இருந்த போதே அந்த விவகாரத்தில் தலையிட மறுத்தவர் தலைவர் கருணாநிதி.
அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்கு கடினமான வேலை கிடையாது.  எதிர்க்கட்சி என்பது எதிர்த்துப் பேசுவது மட்டுமல்ல, தேவைப்பட்டால் ஆலோசனை வழங்குவதற்கும் தான்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார். சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறும் இந்த மாநாடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments