Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.. 2 வருடங்களுக்கு முன் வாங்கிய சொத்து என்ன?

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (10:19 IST)
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை தி.நகர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனையை தொடர்ந்து, சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் சோதனை செய்து வருவதாகவும், முக்தார் கார்டன் இல்லத்தை 2 வருடங்களுக்கு முன்  அமீர் வாங்கியதாக தகவல்  வெளியானதை அடுத்து இந்த சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சோதனை செய்ய வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீர் வீடு பூட்டியிருந்ததால், 10 நிமிடங்கள் காத்திருந்து பிறகு சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  
 
காலை 7 மணி முதல் சென்னை முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருவதாகவும், ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில், அமலாக்கத்துறை சோதனை தீவிரமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments