Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியை கைது செய்த நோக்கம் பயனற்றதாகிவிட்டது: அமலாக்கத்துறை

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (15:44 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான நோக்கமும் விசாரணை செய்யப்படுவதற்கான நோக்கமும் பயனற்றதாக ஆகிவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு குறித்து அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது. 
 
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவில் ’கைது செய்யப்பட்ட உடனே அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் குன்றியதாக நடித்து மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார் இதனால் அவரை கைது செய்ததற்கான நோக்கமும் விசாரணையும் பயனற்றதாகிவிட்டது. 
 
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் விசாரணைக்கு எந்த விதத்திலும் உதவாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சேர்ந்து விட்டதால் அவரிடம் விசாரணை நடத்த அமலாகத் துறைக்கு உரிய உத்தரவுகள் இருந்தும் பயனில்லாமல் உள்ளது என்றும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments