Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.. பிரபல நகைக்கடைகளில் சோதனை..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (17:11 IST)
சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவல் படி சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள மொத்த நகைக்கடை விற்பனை நிலையங்கள் முதலீட்டு நிறுவனங்கள் உட்பட ஏழு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி ஹங்கித் என்பவருக்கு சொந்தமான மொத்த நகைகள் விற்பனை நிறுவனம் மற்றும் வெங்கடேஸ்வரா நகை கடை, பூக்கடை என் எஸ் சி போஸ் சாலையில் உள்ள நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தெரிகிறது.

மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை முடிந்த பின்னர் சோதனையின் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments