Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எட்டுப் போட்டு விளையாடிய எடப்பாடியார்! – வைரலான புகைப்படம்!

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (14:03 IST)
சேலத்தில் அம்மா உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள உபகரணங்களில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அம்மா உடற்பயிற்சி மையம் மற்றும் அம்மா பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தார். இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யும் வகையில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களோடு நவீன பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது உடற்பயிற்சி மையம். அதுபோல பெரியவர்கள், குழந்தைகள் பொழுதை போக்கும் விதமாகவும், பெரியவர்கள் காலாற நடந்து பயிற்சி செய்யவும் சுற்றுசூழல் பூங்கா ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள்.

உடற்பயிற்சி மையம் மற்றும் பூங்காவை திறந்து வைத்த முதல்வர் அங்குள்ள உபகரணங்களில் உடற்பயிற்சி செய்து பார்த்தார். பிறகு பூங்காவுக்கு சென்ற அவர் அங்குள்ள டனோசர் பொம்மையோடு போட்டோ எடுத்து கொண்டார். பிறகு பெரியவர்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 8 போன்ற வளைவு பாதையில் சிறிது நேரம் நடந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

பலர் அந்த புகைப்படங்களுக்கு ஆதரவாகவும், அதேசமயம் சிலர் கிண்டல் செய்தும் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments