Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு தேடி வரும் நிவாரணம்! வீட்டிலேயே இருங்க! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (15:12 IST)
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண பணம் நேரடியாக வீடுகளில் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 19 முதல் 30 வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினையை சந்திக்காமல் இருக்க ஊரடங்கு செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் குடும்பத்திற்கு ரூ.1000 நிவாரண தொகையாக அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரண தொகையை ஜூன் 22ம் தேதி முதல் நேரடியாக வீடுகளுக்கு சென்றே விநியோகிக்க உள்ளதாகவும், மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments