திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (15:40 IST)
5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

 
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் “சத்தீஸ்கரில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட தேர்தல் நவம்பர் 12ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 20ம் தேதியும் நடைபெறும். ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு டிசம்பர் 7ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்.  அதேபோல், மத்தியப்பிரதேசம் மிசோரம் ஆகிய இரு மாநிலங்களிலும் நவம்பர் 28ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
 
மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளில் மழை காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டாம் என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியிருப்பதால் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

உங்கள் மீதே பாலியல் புகார் கொடுப்பேன்.. காதலனுக்காக தந்தையை மிரட்டிய 17 வயது மகள்..!

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு குவியும் லாபம்..!

தங்கம் விலை ரூ.94,000ஐ தாண்டியது.. மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments