Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ம் சுற்று கலந்தாய்வு முடிந்தும் 50,000 இடங்கள் காலி.. 1 மாணவர் கூட சேராத கல்லூரிகள் இத்தனையா?

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (10:55 IST)
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கலந்தாய்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் சமீபத்தில் மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடந்தது. 
 
இந்த நிலையில் தற்போது பொறியியல் படிப்புக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இன்னும் 50,000 இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலம் இருப்பதாகவும் 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாகவும் 61 கல்லூரிகள் 10 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
மொத்தம் 263 பொறியியல்  கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளதால் பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
Edited by  Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments