Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரிகளில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. புதிய தேதிகள் என்ன?

Siva
வெள்ளி, 10 மே 2024 (08:01 IST)
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொறியியல் தேர்வுகள் ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து நடத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுகள் ஜூன் 6 ஆம் தேதி முதல் நடத்தப்படும் எனவும், நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வாக்குகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியியல் கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால் இந்த தேதி மாற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியியல் கல்லூரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளதாகவும், ஆதலால் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஜூன் 6 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments