Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோட்டோர டீக்கடையில் டீ குடித்த முதல்வர்-துணை முதல்வர்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (19:35 IST)
அண்டை மாநிலமான கேரளாவில் முதல்வர் டீ குடிப்பது, பேருந்தில் செல்வது ஆகியவை சர்வசாதாரணமாக நடந்து வரும் நிகழ்வுகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் முதல்வரை அருகில் இருந்து பார்ப்பதே அரிதான காரியமாக இதுவரை இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று கஜா புயல் பாதிப்பை பார்வையிட நாகை மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல் ஓபிஎஸ் ஆகியோர் ரோட்டோர கடையில் டீ குடித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இன்று சென்னையில் இருந்து ரயிலில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று பார்த்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவியை செய்தனர். மேலும் மக்களோடு மக்களாக இருவரும் பழகியது ஆச்சரியப்பட வைத்தது

இந்த நிலையில் புயல் நிவாரண பணியை பார்வையிட்டு திரும்பும்போது திருத்துறைப்பூண்டி டவுன் பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது டீக்கடைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அங்கு டீ குடித்தனர். பின்னர் டீ நன்றாக இருந்ததாக டீக்கடைக்காரரை பாராட்டிவிட்டு குடித்த டீக்கு பணம் கொடுத்து சென்றனர். கேரளாவை போல் தமிழகத்திலும் எளிமையான முதல்வரை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments