Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

Mahendran
சனி, 8 பிப்ரவரி 2025 (08:56 IST)
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, பாஜக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் புறக்கணித்திருந்தன. இதனால், ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய முன்னிலை நிலவரப்படி, திமுக வேட்பாளர் சந்திரகுமார் 5,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்  489 வாக்குகள்  மட்டுமே பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 5,000-க்கு மேல் அதிகமாக உள்ளது.

இதனால், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments