Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதகை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள் !

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:55 IST)
உதகையில் உள்ள சீகூர் வனப் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கொஅயில் திருவிழா பூஜையில் பங்கேற்ற 4 பெண்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகேயுள்ள சீகூர் என்ற பகுதியில் ஆனிக்கல் மாரியம்மன் என்ற கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் நேற்று கார்த்திகை சோமாவாரம் தீபம் திருவிழாவிற்காக கொஅயில் திறக்கப்பட்டு, அங்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதில், அப்பகுதியில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.

இந்த நிலையில், கோவிலுக்குச் செல்லும் வனப்பகுதியில் ஒடும் ஆனிக்கல் ஆற்றில் காலையில் குறைவாள இருந்த நீர், மதியம் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

பக்தர்கள் ஆற்றைக் கடக்க முற்பட்டபோது, சரோஜா, வாசுகி, சுசிலா, விமலா ஆகிய  4பெண்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments