Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காரில் பயணம் செய்த தந்தை மகன் பரிதாப பலி

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (12:57 IST)
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 60). இவரது மகன் பிரவீன் அருண் பிரசாத் (30), சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சொந்தமாக கார் வாங்க நினைத்த பிரவீன் நெல்லைக்கு சென்று புதிய காரை வாங்கிவிட்டு, தனது தந்தையுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

கடையநல்லூரைச் சேர்ந்த ராஜா என்பவர் காரை ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் விருதுநகர்-மதுரை சாலையில் பட்டம்புத்தூர் விலக்கு பகுதியில் கார் விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த பிரவீன் மற்றும் கார் ஓட்டுனர் ராஜாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பிரவீன் அருண் பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments