Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுடன் முடிவடைகிறது மீன்பிடி தடைக்காலம்: மீனவர்கள் உற்சாகம்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (08:03 IST)
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றுள்ளனர். இன்று முதல் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்பதால் மீன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம் என தமிழக அரசு அறிவிக்கும். மீன்களின் இனப்பெருக்கத்தை பெருக்கும் வகையில் இந்த தடைக்காலம் அறிவிக்கப்படும் என்பதும் இந்த மீன்பிடி தடை காலத்தில் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடைகாலம் விதிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் அந்த தடைக்காலம் முடிந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை சென்னை முதல் குமரி வரை உள்ள மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளில் உற்சாகமாக அதிகாலையே கடலுக்குள் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று முதல் மீன் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்