Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகை ; எந்த ஊர் செல்ல எங்கு பஸ் ஏற வேண்டும்?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:38 IST)
வருகிற 18ம் தேதி தீபாவளி வருவதையொட்டி, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் 5 இடங்களிலிருந்து வெளியூர் செல்ல பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.


 

 
வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழக அரசு சார்பில் மொத்தம் 11 ஆயிரத்து 645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளன.
 
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தின் வெளிப்பகுதி:
 
வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்
 
அண்ணாநகர் மேற்கு பணிமனை பஸ் நிறுத்தம்:
 
ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்து இயக்கப்படும்.
 
பூந்தமல்லி பேருந்து நிலையம்:
 
ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர்
 
தாம்பரம் சானட்டோரியம் பேருந்து நிலையம் :
 
திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதை தாண்டி செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
 
சைதாப்பேட்டை மாநகரப் பேருந்து பணிமனை:
 
கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
 
அதேபோல், கோயம்பேட்டில் மட்டும் 26 முன்பதிவு செய்வதற்கான கவுண்டர்களும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் சானட்டோரியம் ஆகிய பேருந்து நிலையங்களிலும் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments