Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேகர் ரெட்டியின் டைரியில் சிக்கிய 5 அமைச்சர்கள்

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (15:39 IST)
கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தபோது இந்தியா முழுவதும் ஒரே ஒரு ரூ.2000 நோட்டுக்காக வங்கி வாசலில் கால்கடுக்க கோடிக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் சேகர் ரெட்டி என்ற தனிப்பட்ட நபரிடம் இருந்து மட்டும் கோடிக்கணக்கில் புதிய ரூ.2000 நோட்டு கைப்பற்றப்பட்டது. இதன்பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி டைம்ஸ் நவ் இன்று காலை சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த டைரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்சி சம்பத், தங்கமணி, ஆர்பி உதயகுமார் ஆகியோர்களுக்கு பணம் கொடுத்த விபரங்கள் உள்ளன. மேலும் ஒரு முன்னணி பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments