Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி எதிரொலி: சென்னையில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கம்

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (07:59 IST)
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் 7 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிறிய அளவில் மீண்டும் சர்வதேச விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துபாய், அபுதாபி, ஷார்ஜாவுக்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் பயண திட்டத்தை வெளியிட்டுள்ளன. ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் 7 விமானங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
சமீபத்தில் கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றுடன் வருபவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து தற்போது விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுவரை வந்தே பாரத் விமானங்கள் மட்டுமே பெங்களூர் கொச்சி போன்ற நகரங்களில் இயக்கப்பட்டு வந்தது சென்னை விமான நிலையத்தில் எந்த விதமான விமான போக்குவரத்து இல்லாத நிலையில் தற்போது மீண்டும் நான்கு மாதங்களுக்குப் பின்னர் விமான போக்குவரத்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments