Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விடிய விடிய கனமழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (10:25 IST)
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்ததை அடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்ததன் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால்  உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. 
 
ஜெர்மனி டெல்லி கொல்கத்தா ஆகிய பகுதியிலிருந்து வந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. 
 
அதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கிளம்பும் எட்டு விமானங்கள் தாமதமாக கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான நிலையத்தில் ரன்வேயில் இருக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் தற்போது விமான நிலைய ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments