Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:19 IST)
கே.ஆர்.பி அணையின் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்பட்டதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

 
கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் தன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணைக்கு 2 ஆயிரத்து 648 கன அடி நீர் வருகிறது. இன்று கால நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும்.
 
கே.ஆர்.பி ஆணையில் இருந்து தண்ணீரை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
மேலும் தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்றும்; ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments