Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாடைக்குள் 4 கிலோ தங்கம் வைத்து கடத்தல்.. 2 பெண்கள் உள்பட 4 பேர் சென்னையில் கைது..!

Mahendran
வியாழன், 9 மே 2024 (10:39 IST)
தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் தங்கத்தை கடத்தும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதும் சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் தங்கம் கடத்தி வருவதை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர் என்றும் செய்திகளை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் குஜராத்தில் இருந்த  வந்த நான்கு பேர்கள் தங்களுடைய உள்ளாடைகளில் தலா ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மலேசியாவில் இருந்து உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த குஜராத்தை சேர்ந்த இரண்டு தம்பதியினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் 
இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் தனி படை போலீஸ் சார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த குஜராத்தை சேர்ந்த இரண்டு தம்பதிகளை தனி அறைகளுக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர்கள் நான்கு பேரும் தங்கள் உள்ளாடைகளுக்குள் தலா ஒரு கிலோ தங்க கட்டிகளை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது 
 
இதை எடுத்து நான்கு கிலோ தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் நான்கு பேரையும் கைது செய்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? அன்புமணி

சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்! வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.!!

அரசு பள்ளியாக மாற்றப்பட்ட அம்மா உணவகம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments