Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் ஆயுதங்களுடன் ரகளை: காவல்நிலையத்தில் கண்ணீர் சிந்திய மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (14:44 IST)
சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் சென்னை புறநகர் ரயிலில் கத்தி, பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஓடும் ரயிலில் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு வைரலான நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.



 
 
இதுகுறித்த விசாரணையில் ஃபேஸ்புக் வீடியோவில் உள்ள மாணவர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். முதல்கட்டமாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இன்னும் சில மாணவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் போலீசார் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களை மன்னித்துவிடும்படி கெஞ்சினர். இனிமேல் வாழ்க்கையில் ரயிலில் வரமாட்டோம் என்றும் இந்த ஒருமுறை தங்களை மன்னித்துவிடும்படி கதறி அழுத காட்சியும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

சுற்றுலா பயணிகளை தாக்கிய போராளிகள்.. நியூயார்க் டைம்ஸ் தலைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments