Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு 24 மணி நேர பேருந்து சேவை!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (11:04 IST)
தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து இன்று முதல் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது 
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சுமார் 5000 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 310 சிறப்பு பேருந்துகளை மாநகராட்சி இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது 
 
அதுமட்டுமன்றி இன்று முதல் நாளை மறுநாள் வரை அதாவது 13-ஆம் தேதி நள்ளிரவு வரை 24 மணி நேரமும் சென்னையில் இருந்து சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு செல்வது எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்து சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments