Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படுகிறது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (12:27 IST)
நாளை முதல் தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுக்கு இணங்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். 
 
இந்த அறிவிப்புக்கு இணங்க 500 மதுபான சில்லறை விற்பனை கடைகளை கண்டறிந்து மூடுவதற்கான அரசாணையை ஏப்ரல் இருபதாம் தேதி வெளியிட்டது. 
 
இதன் படி 500 கடைகளை கண்டறிந்து உள்ள நிலையில் ஜூன் 22ஆம் தேதி முதல் அந்த கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 500 மதுபான சில்லறை கடைகள் ஜூன் 22 முதல் செயல்படாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments