Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (15:21 IST)
நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்றும் அதன் காரணமாக தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுவை நோக்கி நகரக் கூடும் என்பதால் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் தென் தமிழக கடலோர பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments