Publish Date: Tue, 19 Jul 2022 (15:30 IST)
Updated Date: Sun, 24 Jul 2022 (19:36 IST)
தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிளஸ்டூ மாணவி திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து மிகப்பெரிய போராட்டம் நடந்தது என்பதும் இந்த போராட்டம் காரணமாக சூறையாடப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நீதிபதியின் உத்தரவை அடுத்து இன்று மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை நடந்த நிலையில் இன்று அவரது உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து அவரை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பதாகவும் எந்தவித அசம்பாவித சம்பவம் நிகழாத வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
இருப்பினும் இன்று உடல் தகனம் செய்யப் படுமா அல்லது நாளை செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது