Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக-மதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தியதா கஜா?

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (21:27 IST)
கஜா புயலினால் டெல்டா பகுதி மக்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களுக்கு விரிசலை ஏற்படுத்தியது போல திமுக மற்றும் மதிமுகவுக்கும் இடையிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கஜா புயல் நிவாரண பணியை சரிவர தமிழக அரசு செயல்படவில்லை என்றும், மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுவதில் சுணக்கம் காட்டி வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று முதல்வர் பார்வையிடவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.

ஆனால் திமுக தலைவர் மு,க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சூளுரைத்து வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களை வைகோவும், ஸ்டாலினும் தெரிவித்திருப்பது இரு கட்சிகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments