Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க படம் தோல்வின்னா தற்கொலை செய்வீங்களா? ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (18:27 IST)
நீட் தேர்வில் தோல்வியானதால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குறித்து டுவீட் செய்த இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு, 'உங்க படம் தோல்வி அடைந்தால் நீங்கள் தற்கொலையா செய்து கொள்வீர்கள்? என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவிரக்தி அடைந்த ரிதுஸ்ரீ மற்றும் வைசியா ஆகிய இரண்டு மாணவிகள் நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து நீட் தேர்வுக்கு எதிரான குரல் தமிழகத்தில் மேலும் வலுத்துள்ளது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில், ''நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது ரிதுஶ்ரீ, வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு  நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்! என்று பதிவு செய்திருந்தார்.
 
ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். 'நீங்கள் இயக்கும் திரைப்படம் தோல்வியடைந்தால் நீங்கள் தற்கொலையா செய்து கொள்ள நினைப்பீர்கள்? அடுத்து நல்ல படம் எடுக்க வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்? அல்லது படங்களை தடை செய்ய போராட்டம் நடத்துவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
காயத்ரியின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments