Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பு

சேத்துப்பட்டு
Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (21:10 IST)
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ரயிலுக்காக காத்திருந்தபோது திடீரென அவரை நோக்கி வந்த நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணை அரிவாளால் வெட்டினார். இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய பின்னர் அந்த பகுதி வழியாக ரயில் முன் அந்த நபர் பாய்ந்து தற்கொலைக்கும் முயன்றார். ஆனால் அங்கே நின்றிருந்த ஒருசிலர் அந்த நபரை காப்பாற்றியுள்ளனர். 
 
இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த பகுதிக்கு வந்த போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவர் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் என்று தெரிய வந்துள்ளது. 
 
இந்த நிலையில் அரிவாளால் வெட்டப்பட்ட இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments