Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோம் ஏன் ஒழுங்கா செய்யல..? – பெற்றோர் திட்டியதால் மாணவி தற்கொலை!

Tamilnadu
Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (09:42 IST)
சென்னையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூரில் ஜி.கே.எம் காலணி பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் பாஸ்கர். இவரது முதல் மகள் வைஜெயந்தி சூரப்பட்டு அருகே உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வாரம் மூன்று நாட்கள் அவர் பள்ளி சென்று வந்த நிலையில் நேற்று பள்ளி சென்றவர் மாலை திரும்பி வராததால் பெற்றோர்கள் அவரை தேடியுள்ளனர்.

இந்நிலையில் கொரட்டூர் அருகே உள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து மாணவி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவர நேரில் சென்று ஆய்வு செய்த போலீஸார் மாணவியின் அடையாள அட்டை மூலமாக அது வைஜெயந்தி என்பதை கண்டறிந்துள்ளனர். வீட்டுப்பாடம் செய்யாததால் பெற்றோர் வைஜெயந்தியை முதல் நாள் கண்டித்திருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

வெளியான ஒரு வாரத்தில் ஜோரான விற்பனை! கவரும் Motorola Razr 60 Ultra சிறப்பம்சங்கள்!

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments