Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீப திருவிழாவுக்கு துணிப்பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு !

தீப திருவிழாவுக்கு  துணிப்பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு !
, வெள்ளி, 6 டிசம்பர் 2019 (17:36 IST)
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வருகின்ற பக்தர்கள் கையில் துணிப் பை, சணல் பை கொண்டு வந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு தங்கம் பரிசு அளிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதாவது :
 
தீப திருவிழாவுக்காக சுற்றுச் சுழலுக்கு உகந்த வகையில் துணிப்பை சணல் பை கொண்டு வருமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
அப்படி துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'என் புருஷனை கொன்ன இடத்தில் என்னையும் கொல்லுங்க...' குற்றவாளி மனைவி !