Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஷா மகாசிவராத்திரியை தடை செய்ய முடியாது; பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (14:01 IST)
கோயம்புத்தூர் ஈஷா மகாசிவராத்திரியால் சுற்றுசூழல் மாசுபடுவதால் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த விழாவில் வந்து கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த விழாவிற்காக ஏராளமான மக்கள் குவிவதால் ஒலி, ஒளி மாசு ஏற்படுவதாக பூவுலகின் நண்பர்கள் குழு சார்பில் இந்த விழாவை தடை செய்து உத்தரவிட வேண்டும் என பசுமை தீர்ப்பாயத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த 2 வருடமாக நடந்து வந்த இந்த மனு மீதான விசாரணையில் தீர்ப்பளித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், மகாசிவராத்திரி விழாவிற்கு தடை விதிக்க முடியாது என கோரிக்கையை நிராகரித்துள்ளது. வழக்கம்போல சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெற்று சிவராத்திரி விழாவை நடத்தலாம் என்றும், ஒலி, ஒளி மாசு ஏற்படாத வண்ணம் விழாவை கொண்டாடவும், அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments