Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரண பொருட்களை இலவசமாக வழங்கிய அரசுப்பள்ளி தலைமை அசிரியர்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (23:49 IST)
பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு ரூ 20 ஆயிரம் மதிப்பிலான கொரோனா நிவாரண பொருட்களை இலவசமாக வழங்கிய அரசுப்பள்ளி தலைமை அசிரியர் & ஆசிரியை செயலுக்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், வரவனை கிராமம், வ.வேப்பங்குடி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கா.தர்மராஜு  மற்றும் ஆசிரியை சு. ரேவதி இருவரும்  இப்பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 10 கிலோ அரிசி, பருப்பு , எண்ணெய், தக்காளி,  கத்தரி ஆகிய பொருட்களை கொரோனா நிவாரண பொருட்களாக  வழங்கினார்.

கொரோனா என்கின்ற கொடூர நோய் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு ஆங்காங்கே பல்வேறு சமூக அமைப்புகள் உதவி தந்து வரும் நிலையில்,  தங்களது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ 20 ஆயிரத்திற்க்கும் மேலான பொருட்களை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சேவையினை ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மக்கள் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments