Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி இ-பாஸ் ரூ.2000; கல்லா கட்டிய கும்பல்! – அரசு அதிகாரிகள் உட்பட 5 பேர் கைது!

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (08:14 IST)
சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல பணம் பெற்றுக் கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து வழங்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் aங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையை விட்டு வெளியேற இ-பாஸ் அவசியமாக உள்ளது. இந்நிலையில் தொழில் நிறுவனங்கள், திருமணம், உறவினர் மரணம் மற்றும் மருத்துவம் ஆகிய அவசர தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் சென்னையில் சிலர் போலி இ-பாஸ்களை தயாரித்து மக்களுக்கு விநியோகிப்பதாகவும், அதற்கு ஆயிரக்கணக்கில் பணம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் போலி இ-பாஸ் தயாரிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ‘சைபர் க்ரைம்’ போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சென்னை பேசின்பிரிட்ஜில் வருவாய் ஆய்வாளராக உள்ள குமரன் மற்றும் அவரது சகாக்கள் சிலர் இணைந்து இவ்வாறாக போலி இ-பாஸ் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவர்கள் சுமார் 200 பேரிடம் தலா ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments