Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பாடத்தை படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருப்பார்களா? எச்.ராஜா

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (21:47 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சில நாட்களுக்கு ஒருமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

திராவிட கட்சியினர் பெரிதும் மதிக்கும் தந்தை பெரியாரை தேச துரோகி' என்றும், அவரது சிலையை அகற்ற வேண்டும் என்றும் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த எச்.ராஜா தற்போது 'பெரியார், மணியம்மை குறித்த பாடங்களை பாடப்புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்ற எச்.ராஜா, அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'பெரியார்-மணியம்மை குறித்த பாடங்களை படிக்கும் குழந்தைகள் எப்படி ஒழுக்கமாக வளரும். ஒரு வயதானவர் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று குழந்தை கேட்டால் அதற்கு என்ன பதில் உள்ளது.?

எனவே பெரியார் குறித்த பாடங்களை புத்தகங்களில் இருந்து நீக்கினாலே அனைத்தும் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். எச்.ராஜா கூறிய இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments