Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலை கடத்தலுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை: எச்.ராஜா!

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (20:27 IST)
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசு இதில் சரியாக செயல்படவில்லை என்று வெளிப்படையாக அவர் கூறினார். 
 
மேலும், தேசிய கட்சி ஒன்றும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்தார். எனவே, இவர் குறிப்பிட்ட தேசிய புள்ளி யார் என்று அனைவரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் இந்த சிலை கடத்தல் பிரச்சனை குறித்து பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தனது டிவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், நிச்சயமாக சிலைகள் திருடியது அல்லது துணை போனது யாராக இருந்தாலும் தூக்கில் போடனும். 
 
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்த தேசியக் கட்சி பிரமுகர் ஒருவர் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தேசியகட்சி பாஜக அல்ல. விரைவில் உண்மை வெளிவரும். இதற்கான போராட்டம் தொடரும் என்று பதிவிட்டுள்ளார். 
 
யாரும் ஏதும் கேட்காமல் தானக வந்து அந்த தேசிய கட்சி நாங்கள் இல்லை என கூறியதால் இதை வைத்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments