Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் கிடையாது கொசுவலைதான்! ப.சிதம்பரத்தை கலாய்த்த எச்.ராஜா

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2019 (10:49 IST)
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்படாததை கிண்டல் செய்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எச்.ராஜா.

காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்வதும், மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் ஜாமீன் மனு கோரியபோது ப.சிதம்பரத்திற்கு சிறையில் தங்கிய நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை வேண்டுமானால் செய்து தரலாம். ஆனால் ஜாமீன் தரமுடியாது என மறுத்துவிட்டார்கள்.

இதை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்ட எச்.ராஜா “மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு.” என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments