Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை நிலவரத்துக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (09:34 IST)
மழை பெய்யும் நிலவரத்திற்கு ஏற்ப அந்தந்த பள்ளி ஆசிரியர்களே விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை கலெக்டர் மட்டுமே தெரிவித்து வரும் நிலையில் மழையின் அளவைப் பொறுத்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்றும் மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனிவரும் நாட்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments