Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: பயணிகளை காப்பாற்ற ஓட்டுனரின் சாமர்த்திய செயல்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (12:12 IST)
பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: பயணிகளை காப்பாற்ற ஓட்டுனரின் சாமர்த்திய செயல்!
சென்னையில் இருந்து நாகப்பட்டினம் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இரவு சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் என்பவர் ஓட்டிச் சென்றார் 
 
அப்போது அவர் பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் பேருந்தில் இருந்த பயணிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோர தடுப்பில் பேருந்தை மோதி நிறுத்தியுள்ளார்.
 
இதனை அடுத்து அவர் பேருந்து பயணிகளின் உதவியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தற்போது அவர் குணமாகி வருகிறார் என்றும் கூறப்படுகிறது 
 
தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் தன்னுடைய பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்று அவர் செயல்பட்ட விதம் அனைவரின் பாராட்டுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments