Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: பயணிகளை காப்பாற்ற ஓட்டுனரின் சாமர்த்திய செயல்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (12:12 IST)
பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: பயணிகளை காப்பாற்ற ஓட்டுனரின் சாமர்த்திய செயல்!
சென்னையில் இருந்து நாகப்பட்டினம் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இரவு சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் என்பவர் ஓட்டிச் சென்றார் 
 
அப்போது அவர் பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் பேருந்தில் இருந்த பயணிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோர தடுப்பில் பேருந்தை மோதி நிறுத்தியுள்ளார்.
 
இதனை அடுத்து அவர் பேருந்து பயணிகளின் உதவியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தற்போது அவர் குணமாகி வருகிறார் என்றும் கூறப்படுகிறது 
 
தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் தன்னுடைய பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்று அவர் செயல்பட்ட விதம் அனைவரின் பாராட்டுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments