Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

Mahendran
செவ்வாய், 18 மார்ச் 2025 (18:10 IST)
இன்று நான்கு நகரங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் பதிவான நிலையில், இன்று இரவு ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று நான்கு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய நான்கு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 23ஆம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வளிமண்டல கீழ் இருக்கும் சுழற்சி காரணமாக, கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி என்பதால் இந்த ஆறு மாவட்டங்களில் மழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments