Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… வானிலை எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (14:52 IST)
தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 4ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்களும் வெளியாகி வருகின்றன. சென்னையை பொருத்தவரை, இன்று வெயில் காணப்பட்டாலும், இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களில், அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து, மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments