Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (14:23 IST)
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில்  இன்று முதல் வரம் 29ஆம் தேதி வரை காண மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் குறிப்பாக மேற்கண்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்டங்களின் நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments